சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை தொடர்பில் தகவல்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கமானது ஷிகோகுவில் இன்று (26.2.2024) காலை 6.24 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.

பாதிப்பும் ஏற்படவில்லை

மேலும், ஷிகோகுவில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இலேசாக அதிர்ந்த போதும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

இலங்கையர்களால் கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் இந்திய புலனாய்வுத்துறை

Read Next

தேர்தலுக்கு முன்பே தமிழகம் வரும் துணை ராணுவப் படை- தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular