வெள்ளிக்கிழமைக்குப் பிறகே சாந்தனின் உடல் இலங்கைக்கு

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனனின் உடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குப் பிறகே இலங்கைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சாந்தனின் சகோதரர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வெள்ளிக்குப் பிறகே சாத்தியம்

தனது அண்ணாவின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படுவது வெள்ளிக்கிழமைக்குப் பிறகே சாத்தியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,  தன்னுடைய தாயை பார்க்க வருபவர்கள் இரு தினங்கள் கழித்து வருமாறும் அவர் இதற்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை,  பிரேத பரிசோதனைகளின் பின்னர் சாந்தனின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என இதற்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read Previous

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு : அதிகரித்துள்ள டொலர்கள்

Read Next

நாமலுக்கு எதிரான வழக்கில் போலி அறிக்கை சமர்ப்பித்த பொலிஸ் உயரதிகாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular