அழுக்கு உடையில் வந்த விவசாயிக்கு அனுமதி மறுப்பு: மெட்ரோ ஊழியர் பணிநீக்கம்!

பெங்களூரு மெட்ரோவில் அழுக்கான உடை அணிந்து வந்த விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அழுக்கான உடை அணிந்து வந்த விவசாயி பயணம் மேற்கொள்ள பாதுகாப்பு மேற்பார்வையாளர் அனுமதி மறுத்துள்ளார்.

பயணச் சீட்டு எடுத்தும் விவசாயியை பயணம் மேற்கொள்ள அனுமதிக்காத பாதுகாப்பு மேற்பார்வையாளரை சக பயணிகள் கண்டித்ததால், அந்த விவசாயிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளை அங்கிருந்த பயணி ஒருவர் விடியோ எடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நிலையில், பெங்களூரு மெட்ரோவில் விஐபிகள் மட்டும்தான் பயணிக்க வேண்டுமா?

மெட்ரோவில் பயணிக்க ஆடை கட்டுப்பாடு உள்ளதா? என்று பலர் கண்டனத்தை பதிவு செய்தனர்.

Read Previous

2 நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று பிற்பகல் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.

Read Next

வௌ்ளவத்தையில் துப்பாக்கிச்சூடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular