நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த ஜனவரி மாதத்தில் நூற்றுக்கு 2.3 வீதத்தால் அதிகரித்துள்ளது.
அதிகரித்துள்ள டொலர்கள்
இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கடந்த டிசம்பரில் 4,392 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த கையிருப்பு, ஜனவரியில் 4, 491 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இக்கையிருப்பு, சொத்துக்களில் சீன மக்கள் வங்கியின் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்பு பரிமாற்ற சலுகையுடன் பெற்றுக்கொள்ளப்பட்டமை உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.