யாழ். மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் !

பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் யாழ்ப்பாணம் இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூா் மற்றும் நீண்டதுார தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துனா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா்.

இதனால் தனியாா் போக்குவரத்து சேவைகள் மாகாண மட்டத்தில் முடங்கியுள்ளன.

இந்நிலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துனா்கள் யாழ். மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அதனால் இ.போ.ச பேருந்துகளும் சேவையில் ஈடுபட முடியாதளவு நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை சந்தித்தனர்.

Read Previous

தடுத்துவைக்கப்பட்டுள்ள – காணாமலாக்கப்பட்டுள்ள பிள்ளைகளை தேடி அலையும் தாய்மார்களின் ஒட்டுமொத்த குறியீடு சாந்தனின் தாயார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Read Next

மெதுவாக இயங்கும் ஸ்மார்ட்போன்களை வேகமாக மாற்றுவது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular