பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்திருப்பதாக கூறி அரசு ஊழியரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி.
இதுபோன்று பலரை மிரட்டி லஞ்சம் பெற்று சக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பிரித்துக் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது
இன்று நடைபெற்ற சோதனைகளில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன
மதுரை மற்றும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் பலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது
கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி வீடு அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள இடங்களில் சோதனை நடத்த நடவடிக்கை – லஞ்ச புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்து குறித்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிக்கை
“லஞ்ச பணத்தில் சக அதிகாரிகளுக்கு பங்கு”
லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் சுமார் 15 நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
அங்கித் திவாரி இது போன்று பல நபர்களை மிரட்டி, கோடிக்கணக்கில் பணம் வசூலித்து சக அதிகாரிகளுக்கு பங்கு பிரித்து கொடுத்துள்ளார் – லஞ்ச ஒழிப்புத்துறை
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வீடு மற்றும் அவர் அலுவலகத்தில் பயன்படுத்தி்ய 3 லேப்டாப்கள் பறிமுதல் என தகவல்