டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடர், இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான போருக்கு இணையாகக் கருதப்படும் ஆஷஸ் தொடரை, இம்முறை கைப்பற்றப் போவது யார் என்ற எதிர்பார்ப்பில் டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர்.இந்தியா – பாகிஸ்தான், மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற RIVALARY மோதல்களுக்கு எல்லாம் முதன்மை என்றால், அது ஆஷஸ் தொடர் தான். உலகக்கோப்பையைவிட ஆஷஸ் தொடரை வெல்வதே முக்கியம் என இரு அணி வீரர்களும், இரு நாட்டு ரசிகர்களும் எண்ணும் அளவுக்கு, இந்தத் தொடர் கௌரவப் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. 1882-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த மோதல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையென கடுகளவும் சுவாரஸ்யத்துக்குக் குறைவின்றி நடைபெற்று வருகிறது. நூற்றாண்டுகளைக் கடந்துள்ள ஆஷஸ், தற்போது BAZBALL கோட்பாட்டுக்கும் – உலக டெஸ்ட் சாம்பியனுக்குமான மோதலாக அமைந்துள்ளது.