5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (டிச.3) எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், மிசோரம் மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கை டிச. 4ம் தேதிக்கு தள்ளிவைப்பு.
டிச.3 ஞாயிற்றுக்கிழமை மிசோரம் மக்கள் மிக முக்கிய நாளாக கடைபிடித்து வருவதால், வாக்கு எண்ணிக்கையை வேறொரு நாளுக்கு மாற்ற பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததால் தேதி மாற்றப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம்.