“நாளெல்லாம் நம்மை இயக்கிடும் நூற்றாண்டு நாயகர், கலைஞரின் மனசாட்சியென வாழ்ந்திட்ட முரசொலி மாறன் 90வது பிறந்தநாள் இன்று! மதுரை சிலைமானில் கலைஞரால் 1952-ல் திறந்து வைக்கப்பட்ட கழக அலுவலகத்தில், மரியாதைக்குரிய முரசொலி மாறன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்..
கொள்கைக் கருவூலமான முரசொலி மாறன் எழுதிய மாநில சுயாட்சி நூல் அனைவரும் படித்திட வேண்டிய ஒன்று! அவரின் புகழ் போற்றுவோம்! அவரது கருத்துகளை இளைய சமுதாயத்துக்குப் பயிற்றுவிப்போம்!”