தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கும் கடந்த 30-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில், 71.07 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் 3-வது முறையாக சந்திரசேகர ராவ் ஆட்சியை கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் காங்கிரஸ் கட்சி சந்திரசேகர ராவுக்கு பெரிய ஷாக் கொடுத்துள்ளது. கேசிஆர் என்ற அரசியல் ஆளுமையை ஆட்டம் காண வைத்துள்ளார் தெலங்கானா காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டி.
“தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி பொறுப்பை கொடுத்த மக்களுக்கு நன்றி”
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்
தெலுங்கானா மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் – ராகுல்காந்தி