இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில அலுவலகம் அமைந்துள்ள பாலன் இல்லத்தில் நேற்றிரவு கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள அந்த கட்டடத்தின் கீழ் பகுதியில் கற்கள் வீசப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் பாலன் இல்ல வளாகத்தில் உள்ள காவலர்களுக்கும் அருகில் வசிப்போருக்கும் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.