பேட்டியின்போது இந்தியாவை ‘எதிரி நாடு’ என குறிப்பிட்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஷ்ரப் பேசியதால் பரபரப்பு! பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் தனது நிலைப்பாட்டை மாற்றி, “இந்தியாவில் பாகிஸ்தான் அணியினருக்கு அளிக்கப்பட்ட அற்புதமான வரவேற்பு சிறப்பாக இருந்தது, இந்தியா-பாகிஸ்தான் அணியினர் களத்தில் | மோதிக்கொள்ளும்போதெல்லாம் போட்டியாளர்களாக தங்களை வெளிப்படுத்துவார்களே தவிர எதிரிகளாக அல்ல” என இந்திய வீரர்களைப் புகழ்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உலகக் கோப்பை தொடர் நெருங்கும் சூழலில், ஜகா அஷ்ரப்-ன் பேச்சு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது!