ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்கி செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெறும் என, ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. பாகிஸ்தானில் நான்கு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இலங்கையில் ஒன்பது போட்டிகள் நடைபெறவுள்ளன.
அந்த வகையில், மொத்தம் 13 போட்டிகள் இந்த தொடரில் நடைபெற உள்ளன. ஹைப்ரிட் மாடலில் நடைபெறும் இந்த ஆசிய கோப்பை தொடரில் 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், 9 போட்டிகள் இலங்கையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை 2023 ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெறும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் உயரடுக்கு அணிகள் மொத்தம் 13 பரபரப்பான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும். போட்டிகள்,” என்று ACC ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இந்த கிரிக்கெட் கொண்டாட்டத்தை மிகச்சிறந்த முறையில் காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வரவேற்பதற்கு நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்று ACC மேலும் கூறியது.
முன்னதாக, இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் (பிசிபி) ஆசிய கோப்பையை பாகிஸ்தானுக்கு வெளியே மாற்றுவதை ஏற்கவில்லை என கூறியிருந்தது. இப்போதைக்கு, சாம்பியன்ஷிப் நடைபெறும் இடங்கள் குறித்த சந்தேகங்களை ஏசிசி நீக்கியுள்ளது.