மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டார வளமையத்திற்கு உட்பட்ட சௌடார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மீனாட்சிபுரம் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியானது முன்னாள் அமைச்சர் கக்கன் காலத்தில் தொடங்கப்பட்டது. தற்போது இந்த பள்ளியின் முக்கிய கட்டிடமானது பாழடைந்து இருந்தது. இந்த கட்டிடத்தை சீரமைப்பதற்காக கடந்த ஏப்ரல் 2023 நடைபெற்ற பள்ளிமேலாண்மைக்குழு கூட்டத்தில் தீர்மானம் ஏற்றப்பட்டது. இதற்கு உதவிசெய்வதற்காக இந்த பள்ளியில் படித்த பழையமாணவர்கள் , பள்ளிமேலாண்மைக்குழு மற்றும் கிராம மக்கள் உதவியுடன் பாழடைந்த பள்ளி கட்டிடம் சீரமைக்கப்பட்டது.
இந்த சீரமைப்பிற்கு திருச்சி மாவட்டம் விரலிமலையிலுள்ள தொழிலதிபரும், விவேகா கல்விநிறுவனத்தின் தாளாளருமான திரு.வெல்கம் N. மோகன் அவர்கள் இந்த சீரமைப்பிற்கான செலவை ஏற்றுக்கொண்டார். இன்று நடைபெற்ற இந்த புதிய கட்டிடத்தின் திறப்புவிழாவிற்காக திருமங்கல வட்டார கல்வி அலுவலர்களான திரு.விஜயராஜ் மற்றும் A.வெள்ளைச்சாமி தலைமையில் மேற்பார்வையாளரான திரு K.சரவணன் முன்னிலையில் , பள்ளி தலைமை ஆசிரியரான திருமதி R. கோகிலவாணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் , கிராமக்களுடன் மூலம் விழாவானது தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் வரவேற்புரையாக பள்ளி ஆசிரியர் திரு. பூபதி அவர்கள் தொடங்கிவைத்தார்.தேசியகீதத்துடன் விழாவானது இனிதே நிறைவுபெற்றது.