சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் வி.கே.சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், திமுக ஆட்சி அமைத்தது முதல் ஏதோ சந்தைக்கு போவது போல ஒவ்வொரு நாளையும் நகர்த்தி வருகின்றனர். சட்டப்பேரவைக்குத் திரையரங்குக்கு வந்து செல்வது போல் வந்து செல்கின்றனர் என்று விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி பூசலை திமுக பயன்படுத்தி வருகிறது. அனைவரும் ஒன்று சேரக்கூடாது என திமுக செயல்பட்டு வருகிறது. ஓபிஎஸ் விவகாரத்தில் சட்டசபையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றார்.
சாதி பார்த்து அரசியல் செய்திருந்தால் ஒரு கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன் !