vetrimaran-about-rohini-theatre-issue
கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் படம் பார்க்க வந்த பழங்குடியினர்களை, ஊழியர்கள் உள்ளே அனுமதிக்காதது குறித்து இயக்குனர் வெற்றிமாறன் ” நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம். ஆனால் இன்று உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைபிடித்தது ஆபத்தான போக்கு. எதிர்ப்பின் காரணமாக பின்னர் அனுமதி தந்திருந்த போதிலும், இப்படி ஒரு நிகழ்வு நடந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என முகநூலில் பதிவிட்டுள்ளார்