Use electricity sparingly. – Minister Senthil Balaji
கோடைக் காலத்தில் தமிழ்நாட்டில் மின்சாரத்தின் தேவை அதிகரிக்கும் என்பதால் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், மார்ச் மாதம் 16ம் தேதி ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 18,053 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவிட்டுள்ளார்.
நேற்று 16/03/2023 தமிழ்நாட்டின் மின் நுகர்வு 18,053 MW ஆகும்.
முதன்முறையாக 18,000 மெகா வாட்டுக்கும் அதிகமாக மின் நுகர்வு உச்சம் தொட்டுள்ளது. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது.
இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு 15/03/2023ல் 17,749 MW#TNEBunderCMStalin pic.twitter.com/PKnicW9GFy
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) March 17, 2023