ஒடிசா பாலசோரில் விபத்தில் பாதிக்கப்பட்டு சீரமைக்கப்பட்ட தண்டவாளங்களில் ரயில் சேவை தொடக்கம்.ரயில் பெட்டிகள் கவிழ்ந்ததால் பாதிக்கப்பட்ட தண்டவாளங்களில் சீரமைப்பு பணிகள் நிறைவு . தண்டவாளங்களை சரிசெய்து பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்கியது ரயில்வே துறை.நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்று நடந்த 51 மணிநேரத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் ரயில்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. பாலசோரில் நடந்த மூன்று ரயில் விபத்தில் குறைந்தது 275 பேர் கொல்லப்பட்டனர். 1,100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.