சென்னையில் பள்ளி சிறுமியை மாடு முட்டி காயப்படுத்திய சம்பவம்;
சென்னை மாநகரில் சுற்றும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை!
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி பகுதியில், நேற்று மாலை தாயாருடன் வந்த பள்ளிச் சிறுமியை இரண்டு மாடுகள் எதிர்பாராத விதமாக முட்டி மோதி சாலையில் தூக்கி வீசியது.
காயம்பட்ட சிறுமி, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன் அவர்கள்..
சிறுமியை முட்டிய 2 மாடுகளும், சென்னை பெரம்பூர் டெப்போவில் பிடித்து வைக்கப்பட்டுள்ளன.
நகர்ப்புறங்களில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநகரப் பகுதியில் சுற்றும் மாடுகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.