• September 16, 2024

ராகுல்காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம்!

Rahul Gandhi disqualified from Lok Sabha membership!

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம். பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் , தற்போது வயநாடு தொகுதி எம்.பி. பதவி ராகுல்காந்தியிடம் இருந்து பறிப்பு.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ராகுல் காந்தி நேரில் ஆஜராகி இருந்தார். ராகுல் காந்தியின் பேச்சு மோடி சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக எதிர்த்தரப்பினர் வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துகொள்ள அவருக்கு உடனடியாக பிணை வழங்கியும் உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

Read Previous

நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்..!

Read Next

நடிகர் அஜித்குமாருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் விஜய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular