ராகுல் காந்தி இரு நாள் பயணமாக நேற்று மணிப்பூர் மாநிலம் இம்பால் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக சுராசந்த்பூர் மாவட்டத்திற்கு அவர் சென்ற போது பாதுகாப்பு கருதி போலீசார் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து அவர் இம்பால் திரும்பினார்.
இந்நிலையில் மொய்ராங் என்ற இடத்தில் உள்ள நிவாரண முகாமிற்கு ராகுல்காந்தி இன்று சென்றார். அங்கு தங்கியுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், கலவரம் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளின் தலைவர்களை ராகுல் சந்திக்கிறார்.