• September 19, 2024

சமூகநீதி போராட்டத்தை தெடர்வோம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Mk Stalin’s Latest Speech

தோள்சீலை போராட்டத்தின் 200வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 200 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் எத்தகைய இழிநிலை இருந்தது என்பதை இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்துவதற்கு இது போன்ற நிகழ்ச்சிகள் அவசியம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆயிரம் ஆண்டு போராட்டத்தை ஒரு நூற்றாண்டில் மொத்தமாக துடைத்துவிட முடியாது என்றாலும், சமூகநீதி போராட்டத்தை தெடர்வோம் என குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு வர இருக்கும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள் இணைந்து கொண்டாட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருப்பத்தை தெரிவித்தார்.

Read Previous

விஜய்யை பற்றி என்னிடம் கேட்காதீர்கள்! – எஸ்.ஏ.சந்திரசேகர்

Read Next

வெற்றிமாறன் படத்தில் ஜுனியர் என்டிஆர்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular