• September 19, 2024

நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதி !

Minister Senthilbalaji admitted to hospital due to chest pain!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர். 20 மணி நேர விசாரணைக்குப் பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவமனை ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலையை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி உடல்நிலை தொடர்பாக ஒமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக தகவல் அளித்துள்ளனர், “செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட போது அவருடைய உயர் ரத்த அழுத்தம் 160/100 ஆக இருந்தது. இதய துடிபப்பில் மாற்றம் இருந்தது.

ECG யில் சில மாறுதல்கள் இருந்ததால் அவருக்கு மாரடைப்பு வராமல் இருக்க ICUவில் அனுமதிக்கப்பட்டார்.மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வருகின்றது.

Read Previous

விஜய் எம்ஜிஆர் மாதிரி உதவி செய்யனும்..!- செல்லூர் ராஜு

Read Next

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 90 சதவீத இதயஅடைப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular