• September 19, 2024

மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது !

மதுரை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திருமங்கலம் வட்டாரத்தில் அமைந்துள்ள SRP மையத்தில் இன்று மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உதவி உபகரணங்கள் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கநிலை) திரு செல்வகணேசன் அவர்களால் வழங்கப்பட்டது, தலைமை உரை ஆற்றினார், மேலும் அரசு நலத்திட்ட உதவிகளை எடுத்துக் கூறினார். இந் நிகழ்ச்சியில் சிறப்பு பயிற்றுநர் திரு திருபாலமுருகன் அவர்கள் வரவேற்புரையும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திரு சரவணன் அவர்கள் சிறப்புரையும் வட்டார வளமைய IE ஒருங்கிணைப்பாளர் திருமதி விஜிலா அவர்கள் நன்றி யுரையும் கூறினார்கள். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை சமாதான மேரி மற்றும் வட்டார வளமைய சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர் அட்ரின் பால் சாமுவேல் ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.

Madurai district provided support equipment for Handicap students!

 

 

 

Read Previous

நெகிழ்வுத்தன்மை மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். – அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

Read Next

வைரலாகும் அயலான் படத்தின் கிலிம்ஸ் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular