அரசு பள்ளிகளை திருமங்கலத்தில் மாணவர் கொண்டாடுவோம்- விழிப்புணர்வு பேரணி மாணவர் சேர்க்கையில் விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணியை திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் உள்ள சொக்கநாதன்பட்டியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் திரு.சரவணன் வரவேற்புரை வழங்க, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திரு. செல்வ கணேசன் அவர்கள் தலைமை தாங்கி பரப்புரைகள் மூலம் பேரணியை இன்று தொடங்கி வைத்தார். வட்டாரக் கல்வி அலுவலர் திரு.சின்ன வெள்ளைச்சாமி சிறப்புரை வழங்கினார். ஆசிரியர் பயிற்றுநர் திருமதி. பாண்டியன் லட்சுமி இவ்விழாவில் உரையாற்றினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.வள்ளி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு.செல்வம் நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி.காந்திமதி, பெல்லோ ஷிப் திருமதி.ராஜபிரியா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உற்பினர்கள், இல்லம் தேடிக் கல்வித்திட்ட தன்னார்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த பேரணியின் முடிவில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, சொக்கநாதன் பட்டியில் ஆறு குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர் மேலும் அரசு வழங்கிய அனைத்து திட்டத்தையும் ஒலிபெருக்கி மூலமாகவும் பேரணி மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.