ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் ஜெய் பீம் இயக்குனர்

Jai Bheem is directing Rajinikanth’s next film

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், சிபி சக்கரவர்த்தி, தேசிங்கு பெரியசாமி, எச்.வினோத், த.செ.ஞானவேல் உள்ளிட்ட பலரிடமும் நடிகர் ரஜினிகாந்த் கதை கேட்டு வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து ரஜினி ரசிகர்களையும் குதூகலப்படுத்தும் விதமாக ஓர் அறிவிப்பு வெளிவந்துள்ளது. லைகா நிறுவனத் தலைவர்
சுபாஸ்கரன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அதனை முன்னிட்டு ரஜினி ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக ரஜினியின் 170வது படத்தின் அறிவிப்பை லைகா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்காலிகமாக ”தலைவர் 170” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், இப்படம் அடுத்த ஆண்டுக்குள் திரைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ”ரஜினியின் ஒவ்வொரு திரைப்பட வெளியீடும் ரசிகர்கள் கொண்டாடும் திருவிழாதான். அதன்படி அனைவரின் வாழ்த்துகளோடு 2024-ல் மாபெரும்கொண்டாட்டத்திற்குத் தயாராவோம்” என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, ‘ஜெய் பீம்’ படம் போலவே ‘தலைவர் 170’ படமும் ஏதேனும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்போடு, ரஜினியின் உணர்ச்சிபூர்வமான நடிப்பை திரையில் பார்க்க காத்திருக்கின்றனர்.

Read Previous

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு!

Read Next

தட்டி தூக்கிய சீமான் ! ஈரோடு கிழக்குத் தொகுதியில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular