7வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. 2011ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடர், முதல்முறையாக இந்தியாவில் நடக்கிறது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான தென் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்க உள்ளன.
இன்று நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான தென் கொரியா அணியை எதிர்த்து ஜப்பான் அணி விளையாடவுள்ளது. அதன்பின் மாலை 6.15 மணிக்கு தொடங்கவுள்ள போட்டியில் மலேசியா அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. அதன்பின் இரவு 8.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இந்தியாவை எதிர்த்து சீனா விளையாடவுள்ளது.இன்று தொடங்கும் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.