கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆலப்புழா-கண்ணூர் எக்ஸிக்யூட்டிவ் ரயிலில் தீ விபத்து – ஒரு முழு பெட்டி முற்றிலும் எரிந்துசேதமடைந்துள்ளது. ரயிலில் எஞ்சின் இல்லாமல் இருந்த காரணத்தினால் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்திருக்க வாய்ப்பில்லை என கூறும் ரயில்வே அதிகாரிகள், இது சதி வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்!