Educational festivel in thirumangalam
திருமங்கலம் ஒன்றிய அளவிலான “ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா”-பயிற்சி திருமங்கலம் வட்டார வளமையத்தில் நடைபெற்று வருகிறது.
இப் பயிற்சியினை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ)திரு.சரவணன் அவர்கள் தலைமை ஏற்று பயிற்சியின் நோக்கம் பற்றியும் மாணவர்களுக்கு அறிவியல் மானப்பான்மையை வளர்த்து மூடநம்பிக்கைகளைக் களைய வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துக் கூறினார்.
திருமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலர்.திரு.சின்ன வெள்ளைச்சாமி அவர்கள் கலந்துகொண்டு பயிற்சியின் மூலம் மாணவர்கள் அடையும் நன்மைகள் பற்றிக் கூறினார்.
இப்பயிற்சியின் கருத்தாளர்களாக வானவில் மன்ற மற்றும் இல்லம் தேடிக் கல்வித் திட்டத் தன்னார்வலர்களான திருமதி. பிரியதர்ஷினி மற்றும் திருமதி.தீபா ஆகியோர் கலந்து கொண்டு எளிய அறிவியல் பரிசோதனைகளைச் செய்து காட்டி பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்
திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 30 உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு இப் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.
பயிற்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய ஆசிரியபயிற்றுநர்கள் திருமதி.ராஜேஸ்வரி,திரு.சிவராமன் மற்றும் இல்லம் தேடிக் கல்வித் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் திரு.பிரசாத் மற்றும் திரு.செல்வம் ஆகியோர் ஒருங்கிணைத்து வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர்.