Cyclone ‘Mokha’ formed in South East Bay of Bengal and became a very intense storm
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ‘மோக்கா’ புயல், அதி தீவிர புயலாக மாறியது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக வலுவடைந்தது. ‘மோக்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் வங்காளதேசம், மியன்மார் அருகே நிலை கொண்டுள்ளது. மே 14-ம் தேதி வங்காள தேசம் – வடக்கு மியான்மர் இடையே புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 175 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், புயல் 9 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.