“ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து, இந்தி மீதான அவரது நம்பிக்கையைக் காட்டவில்லை;
மாறாக, இந்தித் திணிப்பின் மீதான நம்பிக்கையையே காட்டுகிறது; கடந்த காலங்களில் இந்தி திணிப்பு முயற்சிகள் எப்படி வீழ்த்தப்பட்டனவோ, அதைப்போலவே இனிவரும் காலங்களிலும் வீழ்த்தப்படும். இது உறுதி! தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகள் அனைத்தையும் அலுவல் மொழிகளாக ஒன்றிய அரசு அறிவிக்கட்டும். அவற்றில் எந்த மொழி சிறந்த மொழியோ, எது இலக்கிய வளம் மிக்க மொழியோ, எது இலக்கணத்தில் சிறந்த மொழியோ, அது மக்கள் மனங்களை ஆளட்டும்!”