Anita Memorial Hall in Ariyalur Medical College!
அரியலூர் மருத்துவக் கல்லூரி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது இக்கல்லூரியில் நவீன மருத்துவமனை கட்டப்பட்டு மாவட்ட மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வு போராட்டத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்டம் அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 22 கோடி செலவில் 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு அனிதா நினைவு அரங்கம் என பெயர் சூட்டப்பட உள்ளது.