• September 19, 2024

ரூ.15 கோடி செலுத்த நடிகர் விஷாலுக்கு உத்தரவு !

Actor Vishal ordered to pay Rs 15 crore!

Actor Vishal ordered to pay Rs 15 crore! Actor Vishal ordered to pay Rs 15 crore!

லைகா நிறுவனத்திடம் 21 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரத்தில், 15 கோடி ரூபாயை நடிகர் விஷால் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம், தொகையை செலுத்த தவறினால் விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படங்களை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு, செலுத்தியது.

இது சம்பந்தமாக விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

Read Previous

ரயிலில் தீ வைத்ததாக கைதான ஷாருக் சைஃபி அதிர்ச்சி வாக்குமூலம்!

Read Next

நல்லவர்களை கதை நாயகர்களாக பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது ! – வெற்றிமாறன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular