people
இங்கு கனேடிய தமிழ் மக்களின் பங்குத் தந்தையும் மற்றைய தமிழ் குருமாரும் கனடாவில் ஸ்ரீலங்கா தூதரகத்தால் நடார்த்த பட்ட சுதந்திர தின விழாவில் பங்கு கொண்டு ஸ்ரீலங்கா தூதுவருடன் எடுத்த புகைப்படம்.
ஈழத்தில் ஈவிரக்கமின்றி ஸ்ரீலங்கா இராணுவத்தால் படுகொலை செய்ய பட்ட, எம் மனங்களை விட்டகலா 6 குருமார்களையும் பூசிப்போம்.
இதே வேளை தாயகத்தில ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை கரிநாளாக்கி மாணவர்களால் எடுக்கப் படும் போராட்டங்களுக்கு முன்னின்று, மக்களுக்கான காவலரணாக செயல்படும் கத்தோலிக்க குருக்களுக்கு எம் பாராட்டுக்கள்.
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என கனேடிய அரசால் மேற் கொள்ளபட்ட தீர்மானத்தை மழுங்கடிப்பதற்கான முயற்சியாக, தமிழ் கத்தோலிக்கர்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் நிற்பதாக காட்டுவதற்கான முன்னெடுப் பாகவே கனடாவில் தமிழ் கத்தோலிக்க குருக்கள் ஸ்ரீலங்காவின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கு கொண்டது அமைகிறது.
இதற்கு உரியவர்கள் கத்தோலிக்க மக்களிடமும் அனைத்து தமிழரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
கனேடிய அரசின் மனித நேய முயற்சிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசிற்கு முண்டு கொடுப்பதை தவிர்த்து கொள்வோம்.