இன்று மதுரையில் உள்ள லயோலா கல்லூரி இதழியல் துறை மாணவர்கள் தமிழக அரசின் ஏழை குழந்தைகளின் காலை உணவு திட்டத்தை தவறாக சித்தரித்ததற்கு கண்டனம் தெரிவித்து தினமலர் பத்திரிக்கையை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை கொச்சை படுத்தும் விதமாக தினமலர் இன்று காலை செய்தி வெளியிட்டது. இது மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. சமூக வலைத்தளமான x தளத்தில் “தினமலம்” என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.