நடிகர் ரஜினிகாந்த் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். அப்போது யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.இது சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களை பெற்றது.
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள், தமிழ்நாட்டு மக்கள் நடிகர் ரஜினியை எவ்வளவு உயர்வாக நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஒரு நிகழ்வில் காட்டிவிட்டீர்கள்; பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. இப்படிப்பட்டவர்களிடம் இருந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் காப்பாற்ற வேண்டும். ரஜினி கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைத்திருந்தால் யோகி ஆட்சி போல்தான் இருந்திருக்கும் என விமர்சித்துள்ளார்.