மணிப்பூர் விவகாரத்தை பிரதமர் மோடி நகைப்புக்குரியதாக கருதக் கூடாது. மணிப்பூர் குறித்து நேற்று மக்களவையில் 2 நிமிடங்கள் மட்டுமே பிரதமர் மோடி பேசினார்.தற்போது நாடாளுமன்ற தொலைக்காட்சியின் கட்டுப்பாடு அரசிடம் இருக்கிறது; அதனால், அவர்கள் என்னைக் காட்ட விரும்பவில்லை, அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை. நான் எனது வேலையையும் சரியாக பார்த்திருக்கிறேன்.காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது இருந்த பிரதமர்கள், பா.ஜ.க.வின் வாஜ்பாய் மற்றும் மற்ற பிரதமர்களான தேவகவுடா உள்ளிட்டோர் பேசியதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ஒரு பிரதமர் இவ்வளவு மோசமாக நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டதை பார்த்ததே கிடையாது.-டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு!