உலகளவில் இன்று இந்தியா கௌரவம் பெற்றுள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தை மிக உயர்ந்த இடத்துக்கு பாஜக கொண்டு சென்றுள்ளது. வலுவான இந்தியாவுக்கான அடித்தளத்தை பாஜக அமைத்து வருகிறது.வங்கிகள் திவாலாகி விடும் என்று எதிர்க்கட்சிகள் புகார் கூறி வந்தன. ஆனால், நாட்டின் பொதுத்துறை வங்கிகள் தங்களின் நிகர லாபத்தை இரட்டிப்பாக்கியுள்ளன.எதிர்க்கட்சிகள் என்னையே குறி வைத்து அவதூறு பரப்புகின்றனர். அவர்கள் பொழியும் அவதூறுகள் எனக்கு டானிக் போல உள்ளன. – நேற்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலுரை!