மணிப்பூரில் சொந்த மண்ணிலேயே அகதிகளாக இருக்கும் அவல நிலை நீடிக்கிறது; கண்டனம் என்ற ஒரு வார்த்தையில் பிரதமர் மோடி இதுகுறித்து பேசி முடித்துள்ளார் அவரை நாடாளுமன்றத்தில் பேச வைக்கவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆயிரக்கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டிருக்கின்றன. பெண்களை நிர்வணபடுத்தி மிக கேவலமாக பாலியல் வன்கொடுமை நடத்தியிருக்கிறார்கள்.இதற்காக இந்த அரசு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும்.ஆனால் மோடி ஒருவரியில் இது கண்டிக்கதக்கது என்று சொல்லி அவர் வேலையே பார்த்து கொண்டிருக்கிறார்.மணிப்பூரில் மட்டுமல்ல ஹரியானாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை தலைவிரித்து ஆடுகிறது. – மக்களவையில் விசிக எம்.பி. திருமாவளவன் பேச்சு.