“கைம்பெண்களை, கோயில் திருவிழாக்கள் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி மறுக்கப்படும் நடைமுறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!
ஒரு பெண் தனக்கென ஒரு அந்தஸ்தையும் அடையாளத்தையும் கொண்டிருக்கிறார், திருமண நிலையை காரணம் காட்டி அவரை புறக்கணிக்க முடியாது; இந்த மூட நம்பிக்கைகளை உடைக்க முற்போக்கு சிந்தனையாளர்கள் முயற்சித்தாலும், தமிழ்நாட்டின் சில கிராமங்களில் இது தொடர்வது வேதனை அளிக்கிறது”
ஆடி மாத திருவிழாவிற்கு கோயிலுக்குள் அனுமதிக்காதது தொடர்பாக, பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து.