நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தங்கள் கட்சியை பலப்படுத்தும் விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ள உள்ள இந்த நடைபயணம் இன்று மாலை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்க உள்ளது. இதனை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.இந்நிகழ்ச்சிக்கு அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அண்ணாமலை தொலைபேசி வாயிலாக அழைப்பு விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அதிமுக தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.