இந்திய ஒற்றுமை பயணத்தின்போது நான் சில டாக்சி
ஓட்டுநர்களையும், டெலிவரி ஏஜெண்டுகளையும் சந்தித்தேன். அவர்கள் எல்லோரும் என்னிடம் சொன்னது ஒன்றுதான்; “நாங்கள் கடினமாக உழைக்கிறோம்; ஆனால் எங்களுக்கு பொருளாதார ரீதியாக எந்த பாதுகாப்பும் இல்லை; அரசும் எங்களை கவனிப்பதில்லை; எங்களுக்காக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை” என கூறினர். நாங்கள் எப்போதும் இந்தியாவின் ஏழை மற்றும் உழைக்கும் | மக்களின் பக்கமே நிற்கிறோம்; அப்பொழுதுதான் அவர்களின் உழைப்புக்கான பலன் அவர்களுக்கு கிடைக்கும்; நாங்கள் என்ன சொல்கிறோமோ அதை செய்து முடிப்போம்.
நாட்டின் ஒவ்வொரு உழைப்பாளியும் பொருளாதார ரீதியாக வலுவாகவும், முழு உரிமையுடனும் இருக்கும் போதுதான் இந்தியா ஒன்றுபடும்!”