• September 19, 2024

திமுக கட்சியில் இருக்கும் சாதி பாகுபாட்டை உதயநிதி அறிந்தே இருப்பார். – மாமன்னன் திரைப்படம் குறித்து பா.ரஞ்சித் கருத்து!

Pa. Ranjith's opinion about Maamannan movie!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி பிரதான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.இந்தப் படத்துக்கு பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் மாமன்னன் தொடர்பான தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.அவரது பதிவில்,
“மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. உண்மையாகவே தனித்தொகுதி MLAக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று #மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் திரு
உதயநிதி ஸ்டாலின் திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ் ,வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

36 கோடிக்கு விற்பனையான “ஜவான்” இசை உரிமம்!

Read Next

சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular