பிருத்விராஜ் சுகுமாரன் தனது வரவிருக்கும் திரைப்படமான விலயாத் புத்தா படப்பிடிப்பில் இருந்தபோது ஒரு விபத்தில் காயமடைந்தார். அவரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொச்சியில் உள்ள மறையூரில் படத்தின் ஆக்ஷன் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார் பிருத்விராஜ். அவருக்கு இன்று ஜூன் 26-ம் தேதி முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவருக்கு இரண்டு மாதங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டது.