12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற 1500 மாணவர்களை அவர் சந்தித்து ஊக்கத்தொகை வழங்க உள்ளார். இந்த விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. நடிகர் விஜய் 9.30 மணிக்கு மண்டபத்திற்கு வருகிறார். மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் காலை 7.45 மணிக்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு விருந்தளிக்கிறார் நடிகர் விஜய்.இந்த விழாவுக்காக விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினர் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் 10, +2 மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழாவிற்கு பேனர் மற்றும் கட் அவுட் வைக்க கூடாது என விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை அடுத்து நீலாங்கரை பகுதியில் விஜய் ரசிகர்கள் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர்.