தமிழ்நாட்டில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, வரும் 17ம் தேதி சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்கவுள்ளார் நடிகர் விஜய்!
நீலாங்கரையில் உள்ள RK Convention Centre-ல் இந்த விழா நடைபெறும் என தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வருகின்ற (17-06-2023) சனிக்கிழமை அன்று சென்னை நீலாங்கரையில் உள்ள “RK Convention Centre-ல்” 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தளபதிவிஜய் அவர்கள் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார்.!” என அறிவித்துள்ளார்.