• September 19, 2024

திருமங்கலம் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி!

Tirumangalam teachers training in counting and writing!

மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி கார்த்திகா அவர்களின் ஆலோசனையின் படி திருமங்கலம் டெடி பள்ளியில் 4 மற்றும் ஐந்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்து பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திருமதி செல்வி அவர்கள் பயிற்சியை தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் திரு சின்ன வெள்ளைச்சாமி, மற்றும் திரு விஜயராஜ் பயிற்சியின் அவசியம் குறித்து பேசினார்கள். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சரவணன் ஏற்பாடு செய்திருந்தார். இப்பயிற்சியில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் 130 பேர் கலந்து கொண்டனர். மேலும் பார்வையாளர்கள் திருமதி தாமரைச்செல்வி, ஜெயந்தி, ரேவதி, கலைப்பிரியா மற்றும் கருத்தாளர்கள் 12 பேரும் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஒருங்கிணைப்பாளராக மாவட்ட ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் திரு கருப்புசாமி அவர்களும் ஆசிரியர் பயிற்றுனர் நாகேஸ்வரன் மற்றும் சிவராமன் ஒருங்கிணைத்தனர். இத்திட்டம் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பிற்கு சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tirumangalam teachers training in counting and writing1

Read Previous

தமிழர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு!

Read Next

ஒடிசா மாநிலம் விபத்து மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. – கமல்ஹாசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular