உலக பட்டினி தினமான நேற்று தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் விஜய் ரசிகர்கள் ஏழை மக்களின் பசியை போக்க வேண்டும் என நடிகர் விஜய் அறிவித்தார்.
இதனை அடுத்து இன்று தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.இதே போன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிக்கன் பிரியாணி உணவு வழங்கப்பட்டது. விஜய் மக்கள் இயக்க தென் மண்டல பொறுப்பாளர் பில்லா ஜெகன் தலைமையில் ஏராளமோனோர்க்கு உணவு வழங்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில்
உணவில்லாமல் யாருமே இருக்கக்கூடாது என்பதற்காகவே ஒருவேளை உணவளிக்கும்
திட்டத்தை தளபதி விஜய் தொடங்கியிருக்கிறார் என்றார். மேலும் விஜய் மக்கள் இயக்கம் அரசியலை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என்றும் கட்சி தொடக்கம் குறித்து விஜய் மிக விரைவில் அறிவிப்பார் என தெரிவித்தார்.