“புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததால் தேசத்தின் பெருமிதம் அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ளது;
திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ஏன் கலந்து கொள்ளக்கூடாது என்பதை நாட்டிற்கு சொல்ல வேண்டும்; நாடாளுமன்றத்தின் புதிய வீட்டில் அதன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வசிக்க வேண்டும்!
தேசிய நலன் கருதி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை உங்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளேன்; ஜனநாயகத்தை நான் நம்புகிறேன் எனவே நிகழ்வை புறக்கணித்துள்ள எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை!