ஒடிசாவிலுள்ள சில ஆமைகள் மீது ஜீபிஎஸ் கருவியை பொருத்தி இந்திய விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் ஆமைகள் புதுச்சேரி,காரைக்கால், இலங்கை வரை சென்று வந்திருப்பது பதிவாகியுள்ளது.
நாட்டின் கிழக்கு கடற்கரையில் ஒடிஷாவில் தொடங்கி கன்னி யாகுமரி வரை ஆமைகள் பரவலாக இனப்பெருக்கம் செய்கின்றன. ஆமை இனங்கள், அதன் தாய் எந்தக் கடற்பகுதியில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கிறதோ அதிலிருந்து வரக்கூடிய குஞ்சுகளும், தான் பிறந்த கடற்கரை பக்கமே வந்து முட்டையிட்டு குஞ்சி பொறித்து செல்கின்றன. கடலுக்குள் எந்த இடத்தில் ஆமைகள் சுற்றித் திரிந்தாலும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திரும்பி அதே கடற்கரைக்கே வந்து முட்டையிட்டுச் செல்கின்றன. புதுச்சேரிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆமைகள் முட்டையிட்டு குஞ்சி பொறித்து செல்கின்றன. நமது மண்ணின் பூர்வக்குடிகளான ஆமைகளையும் பாதுகாக்க வேண்டும்.
தகவல் : முனைவர். திருவாளர். சிவக்குமார், விஞ்ஞானி, பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்